what-they-told

img

மீத்தேன் என்னும் மாசு

புவி வெப்ப உயர்விற்கு மீத் தேன் முக்கியக் காரணமாகி வருகிறது என்று ஆய்வுகள் கூறுகின் றன. இப்பசுமைக்குடில் வாயுவின் உமிழ்வு வளி மண்டலத்திலும் மாறுதல் களை ஏற்படுத்துகிறது என்று கண்ட றியப்பட்டுள்ளது. காட்டுத்தீ சம்பவங் களின் எண்ணிக்கை அதிகரிப்பட்டால் காற்றில் கலக்கும் கார்பன் மோனோ ஆக்சைடின் அளவு உயர்வதும் இதற்கு முக்கியக்காரணம் என்று நம்பப்படுகிறது. பூமி சூடாவதற்கு மீத்தேன், கார்பன் டை ஆக்சைடை விட நான்கு மடங்கு அதிகம் காரணமா கிறது. சமீப ஆண்டுகளில் அதிகரிக் கும் இந்த வாயுவின் உமிழ்வைக் கட்டுப்படுத்தாவிட்டால் வரும் ஒரு சில பத்தாண்டுகளில் மீத்தேன் மிக மோசமான விளைவுகளை ஏற்படுத் தும் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். கார்பன் டை ஆக்சைடை விட இது இருபது ஆண்டுகளில் 80சதவீதம் ஆபத்தானதாக மாறும் வாய்ப்புள்ளது. இந்நூற்றாண்டின் தொடக்கத்தில் குறைந்திருந்த இதன் உயர்வு 2007 முதல் அதிகரித்துவருகிறது. 2021இல் இது பில்லியனில் 1900 பகுதிகள் (parts per billion) என்ற நிலைக்கு அதிகரித்துள்ளது. இது தொழிற்புரட்சி காலத்திற்கு முன்பிருந்ததை விட மூன்று மடங்கு அதிகம். கொரோனா காலத்திலும் மீத்தேன் உமிழ்வு அதிகரித்தது வியப்பை ஏற்படுத்துகிறது என்று சிங்கப்பூர் நன் யாங் (Nanyang) பல்கலைக்கழக புவியியல் விஞ்ஞானி சைமன் ரெட்ஃபெர்ன் (Simon Redfern) கூறுகிறார்.
இயற்கை மூலங்கள்
பூமியில் மீத்தேன் உமிழ்வு 40 சதவீத ஈரநிலங்கள் போன்ற இயற்கை மூலங்களில் இருந்தே உருவாகிறது. 60 சதவீத உமிழ்வு கால்நடை வளர்ப்பு, எண்ணை மற்றும் நிலக்கரி போன்ற புதைபடிவ எரிபொருட்களை எடுத்தல், குப்பைக்கிடங்குகளில் இருந்தே வெளிவரு கிறது. ஆர்டிக்கில் பனிப்பாறைகள் உருகுதல், விவ சாயக் கழிவுகள் எரிக்கப்படுதல், எண்ணை மற்றும் வாயு எடுப்பதில் ஏற்பட்ட அதிகரிப்பு, வெப்பமண்டல ஈரநிலங்கள் சூடாவது போன்றவையும் இதற்குக் காரணம் என்று கருதப்படுகிறது. வாயு மண்டலத்தில் இருந்து மீத்தேனை அகற்றும் வேதிவினையின் வேகம் குறைந்ததனால் மீத்தேனின் அளவு அதிகரிக்கிறது. வழக்கமாக வளி மண்டல மீத்தேன் ஹைடிராக்சில் (OH) அயனிகள் மூலமே அகற்றப்படு கிறது. இதே ஹைடிராக்சில் அயனி காட்டுத்தீ சம்ப வங்கள் அதிகரிப்பினால் காற்றில் அதிகம் கலக்கும் கார்பன் மோனோ ஆக்சைடுடனும் வினை புரியும் தன்மை யுடையது. இதனால் வாயு மண்டலத்தின் சமநிலை மாறிவிட்டது.
மூன்று மாதங்களும் பத்தாண்டும்
ஹைடிராக்சில் அயனி வினை புரிந்து சிதைக்கும்வரை வாயு மண்டலத்தில் உள்ள கார்பன் மோனோ ஆக்சைடு மூன்று மாதங்கள் வரை தங்கி யிருக்கும். ஆனால் மீத்தேன் பத்தாண்டுகள் வரை சிதைவடைவதில்லை. வளிமண்டலத்தில் உள்ள ஹைடி ராக்சில் அயனிகள் மற்றும் மாறும் காலநிலை போன்றவை மீத்தேன் மூலங்களில் ஏற்பட்டுவரும் மாற்றங்களை அறிய உதவின. நேச்சர் கம்யூனிகேஷன்ஸ் என்ற ஆய்விதழில் இந்த ஆய்வுக்கட்டுரை வெளியிடப்பட்டுள்ளது. ஈர நிலங் களில் புவி வெப்ப உயர்வினால் நுண்ணுயிரிகளின் செயல்பாடுகள் அதிகமாக நடைபெறுவது இதன் மித மிஞ்சிய உமிழ்விற்கு மற்றொரு கார ணம். மேலடுக்கு வளி மண்டலத்தில் காட்டுத்தீயால் எழும் புகை ஹைடிராக் சில் அயனிகளின் அளவை குறைப்ப  துடன் அந்த அயனிகளின் எண்ணிக் கையையும் அதிகரிக்கச்செய்கிறது. இது வருங்காலத்தில் காலநிலை மாற்றம் மூலம் மிக மோசமான பாதிப் புகள் ஏற்படுவதை இயல்பானதாக்கி விடும் என்று விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர். ஆக்சிஜனின் ஆக்சிஜனேற்றம் திறன் குறைவ தால் காலநிலை மாற்றம் என்பது இப்போது இருமுனைக் கூர்மையுடையவாள் போலாகிவிட்டது என்று லண்டன் பல்கலைக்கழக ராயல் ஹாலோவே (Holloway) புவியியல் விஞ்ஞானி யூவன் நிஸ்பெட் (Euan Nisbet) கூறுகிறார். பாரிஸ் உடன்படிக்கையை சவால் விடும்வகையில் இந்த வாயுவின் உயர்வு உள்ளது. கார்பன் டை ஆக்சைடின் உமிழ்வைக் குறைப்பது இலட்சியமாக இருந்தா லும் மீத்தேனைப் புறக்கணிக்கமுடியாது என்று சைமன் ரெட்ஃபெர்ன் கருதுகிறார். மீத்தேனைக் குறைக்கத் தேவை காசு பணம் மட்டுமில்லை. சிறந்த நிர்வாகத் திறனும், நல்லாட்சியுமே. வளரும் நாடுகள் குறிப்பாக இந்தியா போன்ற அதிக உமிழ்வை ஏற்படுத்தும் நாடுகள் மீத்தேனைக் கட்டுப்படுத்த நடவடிக்கைகளை எடுக்கவேண்டும். பெருகிவரும் மக்கட்தொகை, பயிர்க்கழிவுகள் எரிப்பது போன்றவற்றால் ஆப்பிரிக்காவிலும் இதன் உமிழ்வு அதிகரித்து வருகிறது. சூழலைக் காக்க மனிதகுலம் அதிக கவனம் செலுத்தாத மீத்தேனைக் குறைப்பதிலும் அக்கறை காட்டவேண்டும் என்பதையே இந்த ஆய்வு முடிவுகள் வலியுறுத்துகின்றன.